
அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.
Wednesday, February 29, 2012
Tuesday, February 28, 2012
குறிக்கோளை நான் அழிப்பதே இல்லை
என் பெயரை எப்போதும் சொல்கிறவர்கள், என்னையே அனைத்திற்குமாக நம்பிகிறோம் என்று சொல்கிறவர் என் வார்த்தையின் மீது முழு நம்பிக்கையை வைத்து காத்திருப்பார்கள். இந்த உலகமும் அதனுடைய ஆசை வலைகளால் உண்டான அனைத்தும் அழிந்துவிடும். அனால் என்னை நம்புகிறவர்களின் நம்பிக்கை ஒரு நாளும் அழிந்துவிடாது.
ஜீவனத்திற்காக (வாழ்கையை சார்ந்து) நீங்கள் கவலைப்படுகிற எல்லா விஷயங்களும் அழிந்துவிடும்.என்னையே எப்போதும் பற்றிக் கொண்டிருப்பவருடைய குறிக்கோளை நான் அழிப்பதே இல்லை. அவனுக்கும், எனக்கும் அவநம்பிக்கை என்ற தடையில்லாமல் இருப்பதால் நான் வேகமாக நுழைந்து அவனைக் காத்துக்கொள்ள என்னால் முடிகிறது. ஸ்ரீ சாயி தரிசனம்.
Monday, February 27, 2012
ஆராய்ச்சி தேவையில்லை
பாபாவின் வசனத்தின் பொருளை எவர் வணக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறாரோ, அவர்களுக்கு எப்போதும் நன்மையே நிகழும். எவர் அதில் தோஷமும், குதர்க்கமும் காண்கிறாரோ, அவர் அதலபாதாளத்தில் வீழ்கிறார். பாபாவின் ஆணைக்குக் கீழ்ப்படிபவர், நன்மை பயக்கும் செயலா/தீமைபயக்கும் செயலா என்பது பற்றிய எண்ணத்தை பாபாவின் தலைச்சுமைக்கு விட்டுவிடுகிறார்.பாபாவின் ஆணைக்கு அவர் அடிமை; சுதந்திரமான கருத்தென்பது அவருக்கு இல்லை.பாபாவின் வசனத்தை (சத்ச்சரித்ரா) தவிர எதிலும் நல்லதா / கெட்டாத என்ற ஆராய்ச்சியும் அவர்களுக்கு இல்லை.
Sunday, February 26, 2012
Saturday, February 25, 2012
பத்து மடங்கு
பாபா-வுக்கு
ஒன்று கொடுத்தால் பத்தாகத் திருப்பிக் கொடுக்கிறார். பத்து மடங்கு
அதிகாரம், பத்து மடங்கு சக்தி. பெரும்பாலான பக்தர்கள் இந்த அனுபவத்தை
அவ்வப்போது அடைந்தார்கள். அதுமட்டுமல்லாமல், அதுமாதிரியான செயல்களிலிருந்து
ஆன்மிக நாட்டம் வளர ஆரம்பிக்கிறது. இது என்ன சாமானியமான லாபமா? பாபா-வின்
அளிக்கும் திறன் விசித்திரமானது அன்றோ!
- அப்பாஸாஹெப்- ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.
Friday, February 24, 2012
பறித்து கொள்கிறேன்
என்னிடம் வரும் பக்தர்களுக்கு உடனடியாக நான் வாரி வழங்கி விடுவதாகச் சொல்கிறார்கள். அது உண்மையல்ல. யாருக்கு நான் அனுக்கிரகம் (அருள்) செய்ய விரும்புகிறேனோ அவனை முற்றிலும் பரிசுத்தப்படுத்த அவனிடமிருந்து அனைத்தையும் பறித்து கொள்கிறேன். அது பணமாக இருந்தாலும் சரி, பாவமாக இருந்தாலும் சரி, அல்லது புண்ணியமாக இருந்தாலும் சரி. ஸ்ரீ சாயியின் குரல்
Thursday, February 23, 2012
உன் சந்ததியை வளமாகவும் வைப்பேன்
நானே கர்த்தா (காரணமாவேன்) என்ற எண்ணத்தை ஒதுக்கிவிட்டு, அதற்கு சாயி தான் கர்த்தா என்பதை புரிந்துகொண்டு என்னிடம் அனைத்தையும் ஒப்படைத்தால் நான் பார்த்துக் கொள்வேன். இப்படியெல்லாம் செய்து, உன்னை முற்றிலுமாக என்னிடம் ஒப்படைத்து சரணாகதி செய்யும்போது, நான் நிரந்தரமாக உன்னிடம் தங்கி, உன் பிள்ளைகளை வளர்த்து, உன் பிரச்னைகளைப் போக்கி, உன் மனக் கவலையை தீர்த்து உனக்குள்ள அனைத்தையும் மாற்றி உன்னை இந்த உலகத்தில் நிம்மதியாகவும், உன் சந்ததியை வளமாகவும் வைப்பேன். ஸ்ரீ சாயியின் குரல்.
Wednesday, February 22, 2012
Tuesday, February 21, 2012
Monday, February 20, 2012
பாபாவை உற்றுப்பார்
தாய் ஆமை இந்தக் கரையில் இருக்கிறது, குட்டிகள் அந்தக் கரையில் பாலும், அரவணைப்பின் கதகதப்பும் இன்றி இருக்கின்றன. தாயினுடைய அன்பான கடைக்கண் பார்வையே குட்டிகளுக்குப் போஷாக்கையளித்து வளர்ச்சியடையச் செய்கிறது.
குட்டி ஆமைகள் எப்போதும் தாயைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கின்றன. குட்டிகள் வேறு எதையும் செய்யத் தேவையில்லை. அவற்றுக்குப் பாலும் வேண்டாம், புல்லும் வேண்டாம், வேறெந்த உணவும் தேவையில்லை. தாயை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதே அவற்றுக்கு போஷாக்கு.
நான் ஒன்பது வார விரதமிருக்கலாமா? சப்தாகம் செய்யலாமா? நேர்ந்து கொள்ளலாமா? ஷீரடிக்கு போய் வரலாமா? என்ன செய்தால் என் கஷ்டம் தீரும்? என்று யோசிக்கவே வேண்டாம்.
நீங்கள் எதையும் செய்யத் தேவையில்லை. தாயான சாயியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால்போதும்! அது உங்களுக்கு போஷாக்கு தரும். வறுமையிலிருந்தும், பிரச்சினை போன்றவற்றிலிருந்தும் உங்களை மீட்டுவிடும்.
Sunday, February 19, 2012
Saturday, February 18, 2012
Friday, February 17, 2012
மஹாத்மாக்கள் "வாக்கு"
இந்த உலகில் மற்றவர்களுக்கு நீதி போதனை செய்வதை விட சுலபமானது வேறொன்றுமில்லை. அதனால் மனிதர்கள் பக்குவத்திற்கு வராத காய் போன்றவர்கள். மஹாத்மாக்கள் இதற்க்கு மாறுபட்டு இருப்பார்கள். அவர்கள் பேசுவதை பேச்சு என்று சொல்லவதில்லை. மஹாத்மாக்கள் சொற்கள் "வாக்கு" எனப்படும். அவர்கள் சொல்லவதை செய்து காட்டுவார்கள். ஸ்ரீ சத்குரு வாணி.
Thursday, February 16, 2012
Wednesday, February 15, 2012
சுமூகமாக முடியும்
விதைத்தவுடன் அறுவடைக்கு செல்வது எப்படி மடத்தனமோ, அப்படித்தான் வேண்டியது உடனடியாக பலிக்க வேண்டும் என நினைப்பது. உனது வேண்டுதல் கேட்கப்பட்டாகிவிட்டது. அதற்கான வழிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஏற்ற காலத்தில் எல்லாமே சுலபமாக, சுமூகமாக முடியும் என்பதை என்னிடம் வேண்டியவுடனே தெரிந்துகொள்ளவேண்டும். ஸ்ரீ சாயியின் குரல்.
Tuesday, February 14, 2012
Monday, February 13, 2012
Sunday, February 12, 2012
Saturday, February 11, 2012
Friday, February 10, 2012
Thursday, February 9, 2012
Wednesday, February 8, 2012
Tuesday, February 7, 2012
Monday, February 6, 2012
Sunday, February 5, 2012
Saturday, February 4, 2012
Friday, February 3, 2012
Thursday, February 2, 2012
Wednesday, February 1, 2012
சந்திரா பாய்
சந்திரா பாய் பாபாவை முதன் முதலாக 1892-ல் ஷீரடிக்கு வந்து பல தெய்வீக லீலைகளை கண்டார். இவை அவளுக்கு பாபாவின் மேல் இருந்த நம்பிக்கை, பக்தி, அன்பு ஆகியவற்றை உறுதி செய்தன.
பாபா அவளுக்கு பல் ஒன்று கொடுத்தார். அதை ஒரு தாயத்தில் போட்டு பூஜித்து வந்தாள். அவள் கணவர் ஷிரிடிக்கே சென்றதில்லை. இருந்தாலும் தன் பக்தையின் கணவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்வதாக இருந்தால் அதை முன்கூட்டியே தெரியப்படுத்தி எச்சரிக்கை செய்யுமளவுக்கு பாபா அவள் மீது மிகுந்த தயை காட்டினார்.
சந்திரா பாய் 20 வருடங்களாக ஷீரடிக்கு வந்து கொண்டிருந்தாள். 1918-ல் ஷீரடிக்கு வந்தபோது பாபா அவளிடம், "உன் ஆசை என்ன?" எனக் கேட்டார். அவளோ, "பாபா நீங்கள் சர்வ வியாபி, எல்லாம் அறிந்தவர். என் ஆசைகளையும் அறிந்தவர். எதைச் சொல்ல? " என்றாள். அப்போது அவளுக்கு வயது 48.குழந்தையில்லை. குழந்தை ஆசையிருந்தது. ஆனால் பாபாவிடம் கேட்டதில்லை.
இக்காலக்கட்டத்தில் பாபா மகா சமாதி அடைந்தார். முன்று ஆண்டுகள் கழித்து அவளின் 51 வது வயதில் மாதவிலக்கு நின்றது. இதற்கு 5 மாதம் கழித்து அவளது வயிறு சற்று உப்பியிருந்தது.கால்கள் வீங்கின,வாந்தி வந்தது.குடும்ப மருத்துவர் பரிசோதித்து, வயிற்றில் கட்டியிருக்கிறது,அதை உடனே அகற்றிவிட வேண்டும் என்றார். சந்திரா பாய் ஒப்புக்கொள்ளவில்லை. இது பாபா தந்த குழந்தை 10 மாதம் பொறுத்து பார்க்கலாம் என்றாள்.டாக்டர் 51 வயதில் குழந்தை பிறப்பது சாத்தியமற்ற செயல் என அடித்துக் கூறினார்.
பாபாவின் தயை சாத்தியம் இல்லாத எதையும் சாத்தியமாக்கும் என்றாள் அவள். இதற்கிடையில் அவள் உடல்நிலை சற்று மோசமடைந்தது.இதை சரி செய்ய மாதக் கணக்கில் உதியும் நீரும் அருந்தி வந்தாள்.
பாபா சமாதியாகி 3 வருடம் 2 நாட்கள் கழித்து ஒரு த்ரயோதசி நாளில் அவளுக்கு ஒரு மகன் பிறந்தான்.
ஒருமுறை சந்திராபாயை பற்றி தாதா சாகேப் தீட்சித்திடம், "நான் எங்கே சென்றாலும் இவள் என்னை தேடி வந்துவிடுகிறாள்.7 பிறவிகளில் இவள் என் சகோதரி" என்றார் பாபா. 1918 ல் சந்திரா பாய் பாபாவை சந்தித்த போது, "பாய், இனி என்னை பார்க்க ஷிர்டிக்கு வந்து கஷ்டப்பட வேண்டாம். நீ எங்கு இருக்கிறாயோ அங்கே நான் இருப்பேன்" என்றார். இதைக் கேட்ட சந்திரா பாய் அழுது விட்டாள்.
Subscribe to:
Posts (Atom)
Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba
Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba http://www.shirdisaibabasayings.com ...

