நம்மில் பலர், நான் பாபாவிடம் சரணடைந்துவிட்டேன், பாபாவின் கதைகளையும், லீலைகளையும் தினமும் படிக்கிறேன், கேட்கிறேன், தியானமும் செய்கிறேன். ஆனாலும் எனக்கு வந்த கஷ்டங்கள் இன்னும் தொடருகின்றன. எப்போது பிரச்சனை முடியும் என்று தெரியவில்லை. அவர் எப்போது எனக்கு கலங்கரை விளக்காக இருக்கப் போகிறார்? எனப் புலம்புவார்கள்.
இது போன்றவர்கள் புலம்பும்போதும் கண்ணீர் விட்டுக் கதறும்போதும், சத்குருவே இவர்களுக்கு உடனடியாகத் தீர்வை தாருங்கள் என நம் மனம் கேட்டுக்கொண்டாலும், அவர்களுக்குள்ளேயே உள்ள நம்பகத் தன்மை, அகங்காரம், எதிர்பார்ப்பு இவைகளால் தாமதம் ஏற்படுகிறது. இதைப் பற்றி 24-ம் அத்தியாயம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.- ஸ்ரீ சாயி தரிசனம்
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil