இன்பமும் துன்பமும் மாயையே.இவ்வுலகத்தில் தோன்றும் இன்பம் உண்மையான இன்பமாகாது.அதுவே உண்மையான இன்பம் என்று நம்பிவிடுவதால் உலகப்பற்றுள்ள மனிதன் அதனால் விசையுடன் கவரப்படுகிறான்.ஒவ்வொருவருடைய பிராரப்தத்தின் படி,ஒருவனுக்கு அறுசுவை உண்டிகள் கிடைக்கின்றன;ஒருவனுக்கு மக்கின ரொட்டி துண்டுகளும்,வேறு ஒருவனுக்கு தவித்துக் கஞ்சியும் கிட்டுகின்றன.பிந்தியவர்கள் அதனால் மனவருத்தமடைகின்றனர்;முந்தியவர்கள் தங்களுக்கு குறையொன்றுமில்லை என எண்ணிக்கொள்கின்றனர்.அனால் இவைகளில் எதை உண்பதாலும் கிட்டும் பலன் ஒன்றே,அதாவது பசி தீர்வது.ஒருவன் ஜரிகை துப்பட்டாவை போர்த்திக் கொள்கிறான்.இவருடைய நோக்கமும் ஒன்றே,அதாவது உடலை மறைத்துக் கொள்வது.இன்பமும்,துன்பமும் அவரவர் அபிப்பிராயத்தைப் பொருத்தது.இது மாயையின் தோற்றம்,அழிவைத் தரக்கூடியது.மனதில் சுகம்,துக்கம் என்ற எண்ணங்கள் தோன்றும் போது,அவற்றிற்கு இடம்கொடுக்காதே,எதிர்த்து நில்.அது முற்றிலும் மாயையே.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil