http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.
சாயி பாபா கோவில்களில் மட்டும் வசிப்பவர் அல்லர். தம்மை உண்மையாக நம்பி தன்னிடம் அடைக்கலம் புகும் பக்தரின் உள்ளத்திலும் வாழ்பவர். தான் ஒருவரின் உள்ளத்தில் இருக்கும்போது, அந்த பக்தரின் வாழ்வை மாற்றும் விதத்தில் ஆலோசனைகள் வழங்குவது, அனைத்திலும் நல்லதையே பெற்றுத்தருவது போன்றவற்றை செய்கிறார் பாபா.
சில சமயம் பல்வேறு சூழல்களால் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும் பக்தர்களை யார் மூலமாவது தன்னிடம் வருமாறு செய்து அவருக்குத் தீர்வு தருகிறார். இதனால் பல பக்தர்கள் சாயி பாபா உடனே அற்புதம் செய்துவிடுவார் என நினைக்கிறார்கள். ஸ்ரீ சாயி-யின் குரல்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
எந்த உருவம் தெய்வீக உயிரோட்டத்துடன் இயங்கியதோ, அந்த உருவம் பக்தர்களுடைய இதயத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. பக்தர்களுக்காக கைதூக்கி வாழ்த்து கூறியவர் தம்முடைய பூதவுடலை ஷீரடியில் நீத்துவிட்டபோதிலும், நகரும், நகராப்பொருள் அனைத்திலும் நிறைந்திருக்கிறார். லீலைக்காக அவதாரம் எடுக்கக்கூடிய சாமர்த்தியம் உடையவர் பாபாவே. ஸ்ரீ மத் சாயி ராமாயணம்.
சத்குருவின் பாதங்களை உறுதியாக பிடித்துக் கொள்பவர், மற்றவர்கள் பலவிதமாக சிரமப்பட்டும் அடையமுடியாததை சொற்பமான முயற்சியாலேயே அடைந்துவிடுவர். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.
http://www.shirdisaibabasayings.com
நான் குரு என்பதை நீ உணர்ந்து இருக்கிறாயா? குருவின் வேலை மாணாக்கனுக்கு உணவூட்டி, உறங்க வைப்பதா? இல்லையே ! அவனுக்கு பல வழிகளில் பயிற்சி தருவதுதானே!
எனது சோதனைகள் உன்னை அழிப்பதற்காக அல்ல, நடைமுறை வாழ்க்கையை நீ நன்றாக உணர்வதற்காக. இந்த உணர்ந்துகொள்ளுதல் எப்போதும் உள்ளத்தில் இருந்தால், பிற்காலத்தில் இத்தகைய நிலையை நீ சந்திக்க நேர்ந்தால் எச்சரிக்கையாக இருப்பாய். அதற்காக தேர்வுகளை முன்னதாகவே நான் வழங்குகிறேன்.
குழந்தை நன்றாக நடக்கப் பயிற்சி தரப்படுவதைப் போலத்தான் ஒவ்வொரு நபருக்கும் பயிற்சி தரப்படுகிறது. நீயும் இப்போது அந்தப் பயிற்சிக் கட்டத்தில் இருக்கிறாய். நான் உன்னை பழக்குவிக்கிறேன். - ஸ்ரீ சாயியின் குரல்
பாபா ராமதாசியிடம், " ஒரு ராமதாசிக்கு 'என்னுடையது' என்ற எண்ணமே உதவாது. எதையும், எல்லாரையும் சமமாகப் பார்க்கவேண்டும்." என்றார். அதாவது, ஒரு சாயி பக்தனுக்கு சுயநலம் இருக்கக்கூடாது என்கிறார்.
இறைவனின் பார்வையில் எல்லாருமே எஸ்.சி, எஸ்.டி தான். அதாவது அவனது பட்டியலில் இடம் பெற்றவர்கள்தாம் நாம். பல ஜென்மங்களாக வந்து வந்து போகிற பழங்குடிகள் நாம். ஒருவரை உயர்த்தி, இன்னொருவரைத் தாழ்த்திப் பார்ப்பது பாவம். பாபா இதை அழகாகச் சொன்னார்: புலையனும் நானே, நோயாளியும் நானே, கருப்பு நாயும் நானே! நகரும் நகராப் பொருட்கள் அனைத்திலும் வியாபித்து இருப்பவனும் நானே!
நான் எல்லோரையும் சமமாகப் பார்க்கும் நிலையை வாழ்வின் துவக்கம் முதல் கடைப்பிடித்து வருகிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. யாரையும் புண்படுத்துவதும் கிடையாது. ஷிர்டி சாய்பாபா
Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba http://www.shirdisaibabasayings.com ...