என்னை நம்பினால், இன்று முதல் புதிய முயற்சி செய். புது வாழ்க்கை ஆரம்பிக்கும். இதுவரை தோற்றத்தையும், நம்பிக்கை இழந்ததையும், மரண விளிம்புக்குச் சென்றதையும் மறந்துவிடு. வாழ்வதற்கு வா. உன்னை வசந்தத்திற்கு அழைத்துச் செல்ல நான் காத்திருக்கிறேன்.
என் குழந்தாய்!
உன்னை வாழத் தகுதியில்லாத நபர் என நீயே முடிவு செய்துகொள்ளும் நிலைக்கு வந்திருப்பது தவறானது. அதை தள்ளிவிடு. இன்னும் சிறிது காலத்திற்குள் நல்ல சுழலை ஏற்படுத்துவேன்.
உன் போல இன்னொரு குழந்தை இருக்கிறாள். புரிந்துகொள்ளும் முன்பே விட்டுப் பிரிந்துவிட்டு விவாகரத்துக் கேட்கும் கணவனை நினைத்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.
நான் என்ன பாவம் செய்தேன் என என்னிடம் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறாள். பூர்வ கணக்கு தப்பாது. அது முடிந்துவிட்டது. புதுக் கணக்கைத் தொடங்கு. வாழ்வதற்கு முடிவு செய். நல்ல வசந்த காலம் உனக்காகத் காத்திருக்கிறது. - ஸ்ரீ சாயியின் குரல்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil