
ஸத்குருவின் பாதங்களில் மூழ்காமல், அவருடைய யதார்த்தமான சொரூபம் கைக்கு எட்டாது. ஆகவே, ஸ்ரீ ஹரியின் சொரூபமான ஞானிகளைக் கைகூப்பி, கிருபை செய்யும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும்.
குருவின் பாதங்களில் ஒட்டிக்கொள்வதே நமக்கு எல்லாவற்றுக்கும் மேன்மையான லாபம். ஆகவே, நாம் ஞானிகளின் சகவாசத்திற்கும், பல கோணங்களில் உருவெடுக்கும் அவர்களுடைய அன்புக்கும் ஏங்கும் பண்பை அபிவிருத்தி செய்துகொள்வோமாக.
முழுக்க முழுக்கத் தேஹாபிமானம் உள்ளவனுக்கு பக்தன் என்று சொல்க்கொள்ளத் தகுதியில்லை. தேஹாபிமானத்தைப் பூரணமாகத் துறந்தவன்தான் உண்மையான பக்தன்.
எவனிடம் ஞானகர்வம் உள்ளதோ, எவனிடம், தான் சிறந்தவன் என்னும் தற்பெருமை உண்டோ, எவன் டம்பத்தின் வசிப்பிடமோ, அவனிடம் என்ன புகழ் சேரும்?
தம் குருவின் கீர்த்தியைப் பாடாத அபாக்கியவான்களும், செவிப்புலனைப் பெற்றிருந்தபோதிலும் குருவின் பெருமையைக் கவனமாகக் கேட்காதவர்களும், மந்தமதியே உருவெடுத்து வந்தவர்கள் அல்லரோ
தீர்த்த யாத்திரை, விரதம், யாகம், தானம் இவற்றைவிட மேன்மையானது தவம். அதனினும் மேன்மையானது ஹரிபஜனை. எல்லாவற்றையும்விட மேன்மையானது குருபாதங்களின்மீது தியானம்.
ஸாயீயே ஸாயீபக்தர்களின் தியானம். ஸாயீயே தேவர்களுக்கும் தேவிகளுக்கும் அவர்கள் செய்யும் அர்ச்சனை. ஸாயீயே அவர்களுடைய ரகசியப் பொக்கிஷமுங்கூட. இப்பொக்கிஷத்தை அவர்கள் ரட்சிக்கவேண்டும்; ஆனால் கஞ்சத்தனம் கூடாது.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil