
மதியப் பொழுது ஆரத்தி முடிந்த பிறகு ஒரு முறை பக்தனோடு பேசிக் கொண்டிருக்கையில் சாய்பாபா சொல்லியிருக்கிறார்;
" உனக்கு எங்கு விருப்பமோ அங்கு இரு. என்ன தெரிந்தெடுக்கிறாயோ அதையே நீ செய். ஆனால் ஒன்று நினைவிருக்கட்டும். நீ செய்யும் ஒவ்வொன்றும் எனக்கு தெரியும். நான் தான் நடத்துனர். அசைவன அசையாவன என அனைத்திலும் நானே இருக்கிறேன். அனைத்து உணர்வுகளின் இயக்குனன். ஆக்குபவன், காப்பவன், அழிப்பவன். என் பக்கம் கவனம் முழுவதையும் பதித்து விடுவோனை எதுவும் அழிக்காது. ஆனால், என்னை மறந்து விடுபவனை மாயை அழித்தே விடும். புழு பூச்சி முதல் சுழலும் கோள்கள் உட்பட பிரபஞ்சங்கள் அனைத்துமே நான் அல்லது என் பிற வடிவங்கள் "
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil