
பம்பாய் பாந்திராவைச் சேர்ந்த ரகுவீர் புரந்தரே சாய்பாபாவின் அன்பு மிகுந்த பக்தர். சீரடிக்கு வெளியே, பாபா தமக்கு நேரில் காட்சியளித்த அனுபவத்தை பற்றி கூறுகிறார்;
எனது மனைவியை காலரா நோய் தாக்கியது. மருத்துவர்கள் அவள் பிழைப்பாள் என்ற நம்பிக்கையை இழந்து விட்டனர். அப்போது தாதரில் என் வீட்டுக்கு முன்னால் இருந்த தத்தரின் கோவிலுக்கு அருகில் சாய்பாபா நின்று கொண்டிருப்பதை கண்டேன். அவர் அவளுக்கு உதியம் தீர்த்தமும் அளிக்கும்படி கட்டளையிடவே அவளுக்கு அவற்றை கொடுத்தேன். அரை மணி நேரத்தில் அவளது உடலில் போதுமான வெப்பம் ஏற்பட, டாக்டருக்கு நம்பிக்கை திரும்பியது. அவள் விரைவில் குணம் அடைந்தாள்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil