போதிப்பவர் குரு,போதித்து கடவுளிடம் இட்டுச் செல்பவர் சத்குரு,தங்களது சித்திகளையும் உயர்ந்த சக்திகளையும் பயன்படுத்தி பகவானிடத்தில் எல்லோரையும் வரவழைப்பவர் சமர்த்த சத்குரு.ஒரு குருவை மற்றொரு குருவுடன் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது.ஒப்பிட்டுப் பார்த்தால் அனேகமாக மனக்கசப்பை அளிக்கும்.பக்தனுடைய நலனுக்கும் அது ஒவ்வாது.பாபாவின் குணங்கள் அற்புதங்கள் பற்றி கேட்டறிந்தோ,தங்களுடைய சொந்த அனுபவங்கள் அல்லது பிறருடைய அனுபவங்கள் வாயிலாக புரிந்து கொண்டோ ஒருவர் பாபாவினால் வசீகரிக்கப்பட்டால்,அவர் உடனடியாக பாபாவுடன் மேலும் தொடர்பு கொண்டு அதன் மூலம் பயனடைய வேண்டும்.
பாபாவை எந்த வகையில் சேர்ப்பது,அதாவது அவர் அவதார புருஷரா,அவலீயாவா,தேவாத்மாவா,இந்துவா,முஸ்லீமா என்பது போன்ற சர்ச்சைகளில் ஈடுபடவேண்டிய அவசியமில்லை.உண்மையான பக்தன் இந்தமாதிரி விஷயங்களில் கவனம் செலுத்தமாட்டான்.
ஸ்ரீ சச்சிதானந்த சமர்த்த சத்குரு சாயிநாத மஹராஜருக்கு ஜெயம் உண்டாகட்டும்"
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
பாபாவை எந்த வகையில் சேர்ப்பது,அதாவது அவர் அவதார புருஷரா,அவலீயாவா,தேவாத்மாவா,இந்துவா,முஸ்லீமா என்பது போன்ற சர்ச்சைகளில் ஈடுபடவேண்டிய அவசியமில்லை.உண்மையான பக்தன் இந்தமாதிரி விஷயங்களில் கவனம் செலுத்தமாட்டான்.
ஸ்ரீ சச்சிதானந்த சமர்த்த சத்குரு சாயிநாத மஹராஜருக்கு ஜெயம் உண்டாகட்டும்"
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil